- Friday
- April 19th, 2024
யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை...
சமுர்த்தி முத்திரை வழங்குவதற்கான மீளாய்வின் போது தெரிவு செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, புதன்கிழமை (13) சந்தித்து முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது பாதிப்புக்களை எடுத்துக் கூறியுள்ளனர். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர்...
உள்ளூராட்சி மன்றங்களில் கீழ் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் மத்திய அரசோ அல்லது மாகாண அரசோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களை விடுத்து துறைசார்ந்த நிபுணர் குழுவை விசாரணைக்கு நியமித்து இந்த ஊழல் மோசடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரைநகர்...
மனித உரிமை பாதுகாப்பாளர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதோடு அச்சுறுத்தல்களுக்கும் உட்படுவதாக மனித உரிமை பாதுகாப்பாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். மனித உரிமை பாதுகாப்பாளர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டியை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (13) மனித உரிமை ஆணைக்குழு யாழ். காரியாலயத்தில் இடம்பெற்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் கல்வி...
கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்து வந்த சிலர் நேற்று (13) நாடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இவ்வாறு நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்...
ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக...
துன்னாலை பூதராயன் வீதியில் வீதி விளக்குகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, கரவெட்டிப் பிரதேச சபை மின்சார ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 12.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கரணவாய், அண்ணா சிலையடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சுதர்சன் (வயது 42) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம்...
இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை சீனன்குடாவைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (12) மாலை காங்கேசன்துறையை வந்தடைந்ததாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யபட்ட இந்த மீனவர்கள், இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வரஹே நுவான் சானக (வயது 24), ரவுன்ரா...
பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்மைலி ஷியா முஸ்லிம்களை பஸ் வண்டியொன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கராச்சி நகரில் அப்பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 06 துப்பாக்கிதாரிகள், மேற்படி பஸ்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 37பேரையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை, வயோதிபரை...
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக...
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாதி 6 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியவர், 4 நாட்களின் பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி பூநகரியில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. பூநகரி வேரவிலைச் சேர்ந்த வன்னியசிங்கம் யஸ்ரின்பிலிப் (வயது 31) என்பவரே உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட...
வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வவுனியாவில் நேற்று மாலை வேளை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் - வவுனியா வீதி, பண்டாரிகுளம்- வேப்பங்குளம் வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதி என்பன கடும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தன. இதனால் ஒரு மணி நேரம்...
"எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. "பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்" - என்றும் அவர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட...
அனைத்து உள்ளூராட்சி சபைகளும் மே 15 ஆம் திகதி கலைக்கப்படவுள்ள நிலையில் இதற்கு முன்னர் விசேட ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் அவை கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடைபெற்ற பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்...
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்கடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய்பபட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...
கமலின் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘விக்ரம்’. இதில், கமலுடன் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி ஆகியோர் நடித்து இருந்தனர். ராஜசேகர் இயக்கியிருந்தார். ‘விக்ரம் விக்ரம்’, ‘வனிதா மணி’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக...
நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு உதவிகள் செய்து ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்துள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், விஜய், கடந்த...
Loading posts...
All posts loaded
No more posts