Ad Widget

ஜனாதிபதி வட மாகாணத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விஜயத்தின் போது மாவட்டங்களில் நடைபெறும் அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுனாமி!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் சில கரையோர பிரதேசங்களை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும்...
Ad Widget

வற் வரி இன்றுமுதல் அமுல் : விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்!

வற் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குறித்த வரி திருத்தம் இன்று முதல் அமுலாகின்றது. அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வற் வரி இன்று முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி...

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ,16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் குறித்த மூவரையும் விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர்...

யாழில் உணவகம் ஒன்றில் காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்கள் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றமுன்தினம் (30) இரவு உணவருந்த சென்றவர்களுக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக...

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கத்திக்குத்து!!

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக நேற்று (31.12.2023)குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆண்டின் முதல் நாளிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு!!

இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக...

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி!

தேமுதிக தலைவரும், நடிகருமான ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்‘ கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றைய தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியிலும்...

யாழில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

“யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தற்போது பரவிவரும் டெங்கு...

கில்மிஷாவை வரவேற்ற யாழ். மக்கள்!

அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். இந்திய தொலைக்காட்சி ஜீ...

புலி சீருடை விவகாரம் தொடர்பில் பிணை கிடைத்தமைக்கு நன்றி கூறுங்கள் : டக்ளஸ்

புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்...

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய் தொற்றுகள் : இருவருக்கு கொரோனா!!

சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சிறுவர்கள் நோய் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை கம்பஹா மாவட்ட...

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம்!!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா இதனை உறுதி செய்துள்ளார். எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த...

யாழில் கரை ஒதுங்கிய மர்ம கப்பல்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.

யாழில் மது அருந்துபவர்களைக் குறிவைக்கும் பொலிஸார்!

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டினை காலத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மாத்திரமன்றி வீதிஒழுங்குகளை மீறுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மணிநேரமும் குறித்த சோதனை நடவடிக்கை...

யாழில் புகைப்போட முற்பட்டவர் உயிரிழப்பு!

யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியை 75 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட, புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக தீக்காயங்களுக்கு உள்ளான...

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!!

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும்,...

புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த யாழ். இளைஞனுக்கு பிணை

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது. சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை (27) எடுக்கப்பட்ட போது, கடந்த ஒரு மாதகாலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞன்...

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு...

திஸ்ஸ விகாரை விவகாரம்: யாழில் போராட்டம்!

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த விகாரைக்கு அருகே போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ”வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts